/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உயர்நீதிமன்றத்தில் உறுதி
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உயர்நீதிமன்றத்தில் உறுதி
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உயர்நீதிமன்றத்தில் உறுதி
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் உயர்நீதிமன்றத்தில் உறுதி
ADDED : அக் 08, 2024 04:36 AM

நண்டுபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நண்டுபட்டி ஊராட்சி குருநாதநாயக்கனுாரில் சேர்வைக்கூரான் குளம் நீர்நிலை உள்ளது. இதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: குறிப்பிட்ட சர்வே எண்களிலுள்ள குளம் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அளவீடு செய்யப்படும். ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும். இவ்வாறு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள்: மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.