/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடிக்கம்பங்களை அகற்றுக கலெக்டர் அறிவுறுத்தல்
/
கொடிக்கம்பங்களை அகற்றுக கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : பிப் 21, 2025 06:34 AM
திண்டுக்கல்: உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி, சாதி ,இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர், மத ரீதியான அமைப்புகள், சாதிய, இதர அமைப்புகள் கொடிக்கம்பங்கள், பீடங்களை சம்பந்தப்பட்ட அமைப்பினர் 12 வார காலத்திற்குள் அகற்றிட வேண்டும்.
தற்காலிக கொடிக்கம்பங்கள் வைக்க உரிய அனுமதி பெற்று , நிகழ்ச்சி முடிந்த பின் கொடிக்கம்பங்கள் அகற்றுவதோடு, வைக்கப்பட்ட சாலையில் ஏற்பட்ட பள்ளம் போன்ற பாதிப்புகளை சம்பந்தப்பட்ட அமைப்பினரே சரிசெய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரிசெய்யப்பட்டு அதற்கான தொகை சம்பந்தப்பட்ட அமைப்பினரிடமிருந்து வசூல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.