/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாகல்நகரில் ரூ.2.50 கோடியில் நுாலகம்
/
நாகல்நகரில் ரூ.2.50 கோடியில் நுாலகம்
ADDED : ஜன 06, 2024 06:30 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் வாரசந்தையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட நுாலகம், அறிவுசார் மையத்தைமுதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து நாகல்நகரில் நடந்த விழாவிற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார்முன்னிலை வகித்தார்.
மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் சுப்பிரமணியன், பழநி நகராட்சி தலைவர்
உமாமகேஸ்வரி, கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறிவழிகாட்டு மையம் உதவி இயக்குனர் பிரபாவதி, மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார், நகராட்சி கமிஷனர்கள் பாலமுருகன், சத்தியநாதன், பொறியாளர்கள் ராஜவேல், விஸ்வநாதன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான்பீட்டர், மாநகராட்சி உறுப்பினர் பவுமிதா பர்வீன் பாரூக் பங்கேற்றனர்.