ADDED : ஜன 09, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இதில் ஆர்.டி.ஓ., சக்திவேல்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரிசுவி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் பூங்கொடி பேசியதாவது :
குடியரசு தின விழா அன்று பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு ஏதுவாக, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காலை 6:30 மணி முதலே சிறப்பு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேச ஒற்றுமையை விளக்கிடும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.