/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பால் அடைபட்ட சாலை பரிதவிப்பில் பழநி நகராட்சி 33 வது வார்டு மக்கள்
/
ஆக்கிரமிப்பால் அடைபட்ட சாலை பரிதவிப்பில் பழநி நகராட்சி 33 வது வார்டு மக்கள்
ஆக்கிரமிப்பால் அடைபட்ட சாலை பரிதவிப்பில் பழநி நகராட்சி 33 வது வார்டு மக்கள்
ஆக்கிரமிப்பால் அடைபட்ட சாலை பரிதவிப்பில் பழநி நகராட்சி 33 வது வார்டு மக்கள்
ADDED : டிச 12, 2024 05:58 AM

பழநி: உரிக்கார நாயக்கர் சந்து பகுதியில் ஆக்கிரமிப்பால் சாலை அடைப்பட்டுள்ளதால் பழநி நகராட்சி 33 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
கிழக்கு பாட்டாளி தெரு, கே.வி ஸ்கூல் ரோடு, சையது ராவுத்தர் ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி ரோடை உள்ளடக்கிய இந்த வார்டில் பக்தர்களின் வருகை அதிகம் உள்ளதால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். வெளி நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இதனை கட்டுப்படுத்த போலசார் நடவடிக்கையும் அவசியமாகிறது .கொசு தொல்லையால் மக்கள் பல வித தொற்றுக்கு ஆளாகின்றனர்.இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சேதமான சாக்கடை
சித்ரா, குடும்பத் தலைவி,கிழக்கு பாட்டாளிதெரு : வார்டு முக்கிய சாலைகளில் சாக்கடை சேதமடைந்து உள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தி வெளி நபர்கள் நடமாடத்தை கண்காணிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அதிகம்
சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர் : கார்த்திக் வித்யா மந்திர் பள்ளி செல்லும் வழியில் உரிக்கார நாய்க்கர் சந்து பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால் சாலை அடைக்கப்பட்டுள்ளது. பள்ளி வரும் குழந்தைகள் சுற்றி வரும் நிலையில் உள்ளது. பெற்றோர் குழந்தைகள் சிரமம் அடைகின்றன்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
நாய் தொல்லை அதிகம்
மணிகண்டன்,தனியார் ஊழியர் குறும்பபட்டி :வெளிநபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து இடையூறை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தற்காலிகமாக கொசு தொல்லையை போக்க கொசு மருந்து அடிக்க வேண்டும்.நாய் தொல்லை அதிகளவில் உள்ளது.
பாதாள சாக்கடைக்கு அளவீடு
நடராஜன் , கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : பாதாள சாக்கடை திட்டத்திற்கு அளவீடு பணிகள் நடைபெற்றுள்ளன. விரைவில் தீர்வு காணப்படும். கொசு மருந்து அடிக்கடி அடிக்கப்பட்டு வருகிறது. நாய் தொல்லையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இடும்பன் இட்டேரி ரோட்டில் எனது பெயரை தவறாக பயன்படுத்தி கடைகள் அமைத்துள்ளனர். எனக்கும் கடைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.