/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வருவாய்த்துறை ஸ்டிரைக்; அலுவலகங்கள் வெறிச்
/
வருவாய்த்துறை ஸ்டிரைக்; அலுவலகங்கள் வெறிச்
ADDED : பிப் 25, 2026 07:48 AM

திண்டுக்கல்: வருவாய், நிலஅளவை துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள், நிலஅளவைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மொத்த அலுவலர்களில் 1247 பேரில் 959 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட 247 பணிபுரிந்தனர்.
41 பேர் முறையான விடுமுறை எடுத்திருந்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன.
வி.ஏ.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் ஆன்லைன் பதிவு, நில அளவீட்டுப் பணிகள் முடங்கியது.

