/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளங்களாக மாறிய ரோடுகள் சீரமைக்கலாமே; வாகன விபத்துக்கு வழி வகுப்பு
/
பள்ளங்களாக மாறிய ரோடுகள் சீரமைக்கலாமே; வாகன விபத்துக்கு வழி வகுப்பு
பள்ளங்களாக மாறிய ரோடுகள் சீரமைக்கலாமே; வாகன விபத்துக்கு வழி வகுப்பு
பள்ளங்களாக மாறிய ரோடுகள் சீரமைக்கலாமே; வாகன விபத்துக்கு வழி வகுப்பு
ADDED : பிப் 16, 2025 05:39 AM

மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் ஒன்று திண்டுக்கல் பழநி தேசிய நெடுஞ்சாலை.
இந்த ரோட்டில் லெக்கையன்கோட்டையில் இருந்து செம்மடைப்பட்டி வரை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் ரோட்டில் உள்ள பள்ளங்கள் சரியாகத் தெரிவதில்லை. இதன் காரணமாக டூவீலர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. சில இடங்களில் இந்த பள்ளங்களில் சிமென்ட் கலவை கொண்டு நிரப்பி உள்ளனர். ரோட்டை விட சிமென்ட் கலவை போட்ட இடம் உயரமாக இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடுகளை இணைக்க பல இணைப்பு ரோடுகள் உள்ளன.
இவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளைத் தாண்டி விட்டதால் ரோடுகள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு பலத்த சேதமடைந்துள்ளது.
மேலும் பல ரோடுகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வெளியே சிதறி கிடக்கிறது. ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்லும் சர்வீஸ் ரோடு பல இடங்களில் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது.
இதே போல் தாராபுரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டை இணைக்கும் சர்வீஸ் ரோடும் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. காவேரியம்மாபட்டிக்கு செல்லும் பழையரோடு முற்றிலும் சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள பல ரோடுகளின் நிலை மோசமாக உள்ளதால் நான்கு சக்கர வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல இணைப்பு ரோடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. அப்பியம்பட்டியில் இருந்து கூத்தம்பூண்டி செல்லும் தார்ரோடும் பள்ளங்களாக மாறி உள்ளது. போக்குவரத்து நிறைந்த ரோடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும்.