/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்
/
வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்
ADDED : பிப் 04, 2024 05:50 AM
பட்டிவீரன்பட்டி : வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டியில் வீடு புகுந்து மிரட்டும் கொள்ளையர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வத்தலகுண்டு அருகே கீழக்கோயில்பட்டியில் 4 நாட்களுக்கு முன் நடராஜன் மனைவி நித்திய கல்யாணி 60,யிடம் டவுசர் கொள்ளையர் 6 பவுன் தாலிச் செயினை பறித்து தப்பினர். அங்கு 2 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
பலரது வீடுகளில் கதவை தட்டப்பட்டதால் கிராமமே விழித்தது.
இரு நாட்களுக்கு முன் கே.சிங்காரக்கோட்டையில் சில வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் மாயமாகின. நேற்று இரவு 1 :00மணிக்கு பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டாம்பட்டியில் வீட்டு வெளிப்புற கால்நடை கூடாரத்தில் படுத்திருந்த பாண்டி 68,யை மர்ம நபர்கள் கத்தியுடன் எழுப்பினர்.
பாண்டியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் கருப்பு நிற உடை அணிந்த இருவர் தப்பினர்.
மேலும் 2 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
போலீசாரின் போதிய ரோந்து கண்காணிப்பு இல்லாததால் வத்தலகுண்டு, பட்டிவீரம்பட்டி, செங்கட்டாம்பட்டி, சிங்காரக்கோட்டை பகுதிகளில் கொள்ளை கும்பல் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.