/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோலர் ஸ்கேட்டிங்: சாதித்த அக் ஷயா பள்ளி
/
ரோலர் ஸ்கேட்டிங்: சாதித்த அக் ஷயா பள்ளி
ADDED : ஜன 09, 2026 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங், ஏரோ ஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் 2025 ம் ஆண்டிற்கான
போட்டி 2 நாட்கள் நடந்தது. தமிழ்நாடு அளவில் 500க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் வென்று கோப்பையை கைப்பற்றினர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் சவும்யா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

