sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி

/

வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி


ADDED : ஆக 03, 2025 02:15 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அகத்தியர் நகரை சேர்ந்தவர் வீரப்பன் 43. டிப்ளமோ படித்த தனது மகன் செல்லப்பாண்டிக்கு அரசு வேலை வாங்க நண்பரான அரசு பள்ளி ஆசிரியர் மேட்டுப்பட்டி சரவணனை 43, அணுகினார்.

அவர் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கிவிடலாம் எனக்கூற அதை நம்பிய வீரப்பன், சரவணனிடம் ரூ.16 லட்சம், அவர்கூறியபடி சின்ன காஞ்சிபுரம் கவுரிசங்கருக்கு ரூ.3 லட்சம், மணப்பாறை செல்லம்பட்டி பரத்திற்கு ரூ.1 லட்சம், கோயம்புத்துார் லட்சுமி நகர் உஷாவிற்கு ரூ.3 லட்சம், மதுரை பாஸ்கருக்கு ரூ.1.30 லட்சம் என ரூ.24.30 லட்சம் தந்தார். சரவணன் , திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பெயரில் பணி நியமன உத்தரவு தயார் செய்து வீரப்பனுக்கு அனுப்பினார். பணியில் சேர சென்றபோது அதுபோலி உத்தரவு என தெரிந்தது. வீரப்பன் சரவணனிடம் பணத்தை கேட்க அவர் காசோலை ஒன்றை கொடுத்தார். அதுவும் பணமின்றி திரும்பியது.

பணத்தை கேட்ட வீரப்பனை சரவணன் மிரட்டினார். 2024 ஜூலையில் போலீசார் வழக்குப்பதிந்தனர். ஓராண்டிற்கு மேலாக பள்ளிக்கு செல்லாமல் திருச்சியில் தலைமறைவாக இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரையும் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us