/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சைவ பெருமக்கள் பேரவை கோலப்போட்டி
/
சைவ பெருமக்கள் பேரவை கோலப்போட்டி
ADDED : ஜன 18, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் சைவ பெருமக்கள் பேரவை சார்பில் மகளிருக்கான கோலப்போட்டிகள் நடந்தது.
காலை 11:00 மணிமுதல் மதியம் 1:00 மணி வரை நடந்த போட்டியில் பரிசுக்கான கோலங்களை பி.எம்.எஸ்.வெங்கடேசன் தலைமையில் வேலம்மாள் வெங்கடேசன், கல்யாணி பூபேஷ், விஜயலட்சுமி நல்லதம்பி தேர்வு செய்ய முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
தலைவர் நல்லதம்பி, செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தனர். ராஜகணபதி கோயில் தக்கார் மணிமாறன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.