/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
/
விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
ADDED : பிப் 17, 2025 05:33 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோழகலில் காலை 7:00 மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடந்தது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் அலங்காரம் நடந்தது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
-நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. அருகம்புல்,ரோஜா, மல்லிகை, உள்ளிட்ட பல பூமாலைகள் செலுத்தபட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோவிலில் உள்ள வலம்புரி விநாயகர் சன்னதி, பகவதி அம்மன் கோவிலில் உள்ள வெற்றி விநாயகர், லெட்சுமி விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.