ADDED : பிப் 05, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யனலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா நடந்தது.
தலைவர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். தாளாளர் சாந்தி ஸ்ரீதரன், நிர்வாக இயக்குனர் சாய்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் மோசஸ் ஆண்டறிக்கை வாசித்தார். திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லுாரி துணை முதல்வர் நடராஜன், எம்.வி.எம்., அரசு மகளிர் கலைக் கல்லுாரி பணி ஓய்வு பேராசிரியர் அமுதா, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ பங்கேற்றனர்.
