sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆதரவற்றோருக்கு பள்ளி மாணவர்கள் உதவி

/

ஆதரவற்றோருக்கு பள்ளி மாணவர்கள் உதவி

ஆதரவற்றோருக்கு பள்ளி மாணவர்கள் உதவி

ஆதரவற்றோருக்கு பள்ளி மாணவர்கள் உதவி


ADDED : அக் 31, 2024 02:57 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் உணவு விற்பனை திருவிழா வருவாய் மூலம் பெற்ற தொகையை ஆதரவற்றோருக்கு நலஉதவிகளாக வழங்கினர்.

சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உணவு விற்பனை திருவிழா நடந்தது. மாணவர்கள் தயாரித்து கொண்டு வந்த உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை பள்ளி வளாகத்திற்குள் விற்பனை செய்தனர். இதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு சுற்றுப் பகுதி ஆதரவற்ற ஏழை முதியோருக்கு உடை, போர்வை ,உணவு உள்ளிட்ட நல உதவிகளாக வழங்கினர். பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார்.

அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி, உதவி தலைமையாசிரியர் வெண்ணிலா, கஸ்தூரிபா ஆசிரம நிறுவனர் கஸ்துாரி முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாளர் பாரதிராஜா வரவேற்றார். விழாவில் பங்கேற்றோருக்கு மாணவர்கள் விருந்து பரிமாறினர்.

மாவட்ட உதவி வன அலுவலர் வேலுமணி நிர்மலா துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us