/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : அக் 21, 2024 05:26 AM
திண்டுக்கல்: சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு போன்றவற்றிற்கான உதவித் தொகைகள்,மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்த நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர், இவ்வாரியத்தில் உறுப்பினராகபதிவு செய்து உதவிகள் பெறலாம்.
ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்களை மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக அக். 24ல் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.