ADDED : டிச 31, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களுக்கு இடையேயான 20-வது தேசிய தடகள போட்டிகள் பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடக்கிது.
இதில் பங்கேற்க 16 வயதுக்குட்பட்ட தடகள வீரர்-வீராங்கனைகள் தேர்வு முகாம் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரியில் ஜன.4 காலை 8:00 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றிபெறும் -வீராங்கனைகள் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவார்கள். பங்கேற்க விரும்பும் வீரர்கள ஜன.2 மாலை 6:00 மணிக்குள் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதற்காக மாவட்ட தடகள சங்க அலுவலர்கள் கல்யாணசுந்தரம், சுபாஷ் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிட்டனர்.