ADDED : ஜூலை 26, 2025 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் பொருளியல்துறை, சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து விவசாய பொருளாதாரம் சுற்றுச்சூழல் நிலையுரத்தன்மை பசுமை தொழில்களில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கத்தை நடத்தியது.
பொருளியல்துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் ரெத்தினம், இயக்குநர் துரை , ஓய்வு இணை இயக்குநர் (விவசாயம்) சுப்பிரமணியன், அறிவியல் மன்ற மாவட்ட செயலாளர் ராசு பேசினர். ஆசிரியர்கள் முருகானந்தம், சீனிவாசன் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.