/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 12, 2025 05:11 AM

திண்டுக்கல் : மகா சனிப்பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நந்தி, கொடிமரம், காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆர்.எம்.காலனி - விஐபி நகர்ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபராதனைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம் : ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் அபிஷேகம் ,கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ அபிஷேகம் நடந்தது.
ஒட்டன்சத்திரம் : நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் 16 வகை அபிஷேகம்
,நவாமரத்துப்பட்டிபுதுார் பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் ,ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு அபிஷேகம் நடந்தது. விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ,பூஜைகள் , ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பழநி: கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமலை நாயகி அம்மன் கோயில், கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்திக்கு அபிஷேகம் ,சுவாமி புறப்பாடு, மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கே.அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயில், சாணார்பட்டி காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், தவசிமடை சிவன் கோயில், நத்தம் குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.