ADDED : ஏப் 20, 2025 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத சஷ்டி பூஜை நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.