sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-

/

கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-

கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-

கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-; அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-

3


ADDED : செப் 25, 2024 06:20 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:20 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

மசாலா பாக்கெட்கள், சிறுவர்கள் உண்ணும் தின்பண்டங்கள், முட்டை போன்ற உணவுப் பொருட்கள் பல மாதங்களாக விற்பனையாகாமல் ஸ்டாக் வைத்து காலாவதி ஆனது கூட தெரியாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இது கிராமப்புறத்தில் உள்ள கடை உரிமையாளர்களின் அறியாமையும் முக்கிய காரணமாக உள்ளது.

பொருட்களை வாங்கும் சிலர் காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர்.

காலாவதி தேதியை பார்க்க தெரியாத சில முதியவர்களும், சிறுவர்களும் அறியாமையால் அந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதனால் அவர்களுக்கு உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

உணவு பொருள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அந்த உணவு பொருட்களில் நிறுவனத்தின் பெயர், விலாசம் உள்ளிட்ட பல விஷயங்களை பெரிதாக காட்டுகின்றனர்.

ஆனால் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவைகளை கண்ணுக்குத்தெரியாத வகையில் ஏதாவது ஒரு மூலையில் பாக்கெட்களில் பிரின்ட் செய்கின்றனர்.

சில உணவுப் பொருட்களில் காலாவதி தேதி இல்லாமல் விற்கின்றனர்.

காலாவதி உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக கிராமங்களில் சிறுவர்கள் பயிலும் தொடக்கப் பள்ளிகளின் அருகே சிறிய கடைகள் அமைத்து காலாவதி பொருட்கள், கலப்பட பொருட்கள் விற்பனை அதிகமாக நடக்கிறது.கோதுமை மாவுகளில் மைதா , மிளகில் பப்பாளி விதை , சிறுதானியங்களில் மண் , தின்பண்டங்களில் அதிகமான நிறமிகளை பயன்படுத்துவது என உணவு பொருளில் கலப்படம்

அதிகரித்துள்ளது.உணவகங்கள், துரித உணவகங்களில் விற்பனையாகாத உணவுகளை பல நாட்கள் பிரிட்ஜ்களில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us