/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.ஐ., தேர்வு: 5000 பேர் எழுதுகின்றனர்
/
எஸ்.ஐ., தேர்வு: 5000 பேர் எழுதுகின்றனர்
ADDED : டிச 18, 2025 06:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் டிச.21ல் 3 மையங்களில் நடக்கும் போலீஸ் எஸ்.ஐ.,பணி தேர்வை 5 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழக காவல் துறையில் எஸ்.ஐ., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிச.21 நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4011 ஆண்கள், 1157 பெண்கள் என 5168 பேர் எழுத உள்ளனர். இதற்காக 3 கல்லுாரிகள் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் 1800, எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் 2000, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் 1157 பெண்கள் உட்பட 1360 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2 தாள்களாக தேர்வு நடக்க உள்ளது. முதல் தாள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி , 2ம் தாள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8:30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப் படுவார்கள். முறைகேடுகளை தடுக்க 20 தேர்வர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

