நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : தமிழக தகவல் ஆணையம் சார்பாக அக். 5-ம் முதல் அக்.12 வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரி சுவி பங்கேற்றனர்.