sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு மனித சங்கிலி

/

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு மனித சங்கிலி

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு மனித சங்கிலி

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு மனித சங்கிலி


ADDED : நவ 16, 2025 04:00 AM

Google News

ADDED : நவ 16, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான(எஸ்.ஐ.ஆர்.,) விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது. இதற்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வீரமணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் உதவி கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி ஆர்.எம்.ஓ., செந்தில் குமார், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவிகள் பங்கேற்றனர்.

பழநியில் நகராட்சி கமிஷனர் டிட்டோ துவங்கி வைத்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தத்தின் அவசியம் ஆகியவை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பழநி பஸ் ஸ்டாண்ட், மயில் ரவுண்டானா முதல் பாளையம் ரோடு வழியாக தேவர் சிலை வரை மனித சங்கிலி அமைக்கப்பட்டது.

துணை தாசில்தார் மைதிலி, நகர் நல அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், வருவாய் அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

சின்னாளபட்டியில் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்தார். ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் மனிதசங்கிலி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். துப்புரவு அலுவலர் மணிகண்டன், எழுத்தர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us