/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் மூழ்கி அக்காள், தங்கை பலி
/
கிணற்றில் மூழ்கி அக்காள், தங்கை பலி
ADDED : ஆக 03, 2025 02:58 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரமகாலிங்கம். மனைவி சுமதி. இவர்களுக்கு ஒச்சம்மாள் 11, தமிழ்ச்செல்வி 10 என 2 மகள்கள். சுந்தர மகாலிங்கம் வேலைக்கு சென்ற நிலையில் சுமதி வீட்டில் இருந்தார்.
நேற்று விடுமுறை என்பதால் ஒச்சமாள், தமிழ்ச்செல்வி இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென இருவரையும் காணவில்லை.
இந்நிலையில் வீட்டருகே உள்ள கிணற்றின் கரையில் சிறுமிகளின் செருப்புகள் கிடந்தன. இதையடுத்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின் சிறுமிகளின் உடல்களை மீட்டனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

