sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாலையில் மண்டை ஓடு பழனியில் மக்கள் அச்சம்

/

சாலையில் மண்டை ஓடு பழனியில் மக்கள் அச்சம்

சாலையில் மண்டை ஓடு பழனியில் மக்கள் அச்சம்

சாலையில் மண்டை ஓடு பழனியில் மக்கள் அச்சம்


ADDED : ஆக 05, 2025 05:57 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி: பழனி அடிவாரம் பகுதியில், மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து பூஜை செய்திருந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை ஆகியவற்றில் நெருக்கமாக வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, மூன்று தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் இருந்தன.

காலையில் இதை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், எலும்பு, மண்டை ஓட்டினை அப்புறப்படுத்தினர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன், இதே போல இப்பகுதியில் பொம்மை, எலுமிச்சைப்பழம், பூ போன்றவை வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. குப்பை எடுக்கும் நபர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர். இதுபோன்று அடிக்கடி இப்பகுதியில் நடப்பதால் நடமாட அச்சமாக உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us