ADDED : செப் 18, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : கன்னியாகுமரி செல்லும் ஹவுரா ரயில் திண்டுக்கல் வந்தபோது ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீஸ் இன்ஜின் அருகே உள்ள பயணிகள் பொதுப்பெட்டியில் சோதனை நடத்தினர்.
சீட்டுக்கு கீழே கேட்பாரற்று வைத்திருந்த பேக்கில் 5.100 கிலோ கஞ்சா 20 கிலோ குட்கா இருந்தது.
பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, குட்காவை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.