sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் வேகத்தடை

/

வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் வேகத்தடை

வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் வேகத்தடை

வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் வேகத்தடை


ADDED : ஜூன் 20, 2025 03:36 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டுப்போன மரத்தால் விபத்து

திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு பாலகிருஷ்ணாபுரம் அருகே பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரம் உள்ளதால் இதன் வழியே பயணிப்போர் அச்சத்தில் உள்ளனர். ராஜேஷ் குமார், திண்டுக்கல்.

.....----------சேதமான டிரான்ஸ்பார்மர்

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதமடைந்து காங்கிரீட் பூச்சு கம்பி வெளியே தெரிகிறது . விபத்து அபாயம் உள்ளதால் இதன் அருகில் செல்ல பலரும் அச்சப்படுகின்றனர் . இதை மாற்றி அமைக்க வேண்டும் முருகேஸ், திண்டுக்கல்.

..........-----------

வேகத்தடையால் விபத்து

திண்டுக்கல் - திருச்சி ரோடு முள்ளிப்பாடி முகப்பு பகுதி அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன.இவைகள் திரும்பும் பகுதியில் உள்ள வேகத்தடையால் விபத்து ஏற்படுகிறது .-ஆறுமுகம் குழந்தை முள்ளிப்பாடி.

.........------------எழுத்து பிழையுடன் பலகை

அய்யலுார் தங்கமாபட்டி அருகே பொட்டி நாயக்கன்பட்டி ரோடு பிரிவை காட்டும் பெயர் பலகை எழுத்துப் பிழையுடன் 'பெட்டி நாயக்கன்பட்டி' என உள்ளது. இதனை மாற்ற நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். --வடிவேல், அய்யலுார்.

..........------------

தரை பாலத்தால் சிரமம்

திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகர் செல்லும் ரோடு தரை பாலம் சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் பஞ்சர் ஆகுவதால் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .பழனிச்சாமி, திண்டுக்கல்.

..........------------கோழிக்கழிவுகளால் அவதி

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கோழி க்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது . சுகாதாரகேடும் ஏற்படுகிறது.இதை முறையாக அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளது .இங்கு கோழிக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். முரளி, திண்டுக்கல்.

..........-------------

ரோட்டில் தேங்கும் கழிவு நீர்

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள சாக்கடை சேதத்தால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது .குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர் . இதை கருதி சாக்கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,கல்யாணி, திண்டுக்கல்.

.......------------






      Dinamalar
      Follow us