/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்டவாளத்தில் கற்கள்: தப்பியது அந்தியோதயா
/
தண்டவாளத்தில் கற்கள்: தப்பியது அந்தியோதயா
ADDED : பிப் 12, 2024 11:23 PM

திண்டுக்கல் : நாகர்கோவிலில் இருந்து சென்னை, தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கொடை ரோடு, காமலாபுரம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் வரிசையாக சுண்ணாம்பு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை, ரயில் ஓட்டுனர் கவனித்தார்.
உடனடியாக ரயிலை நிறுத்தி, கற்களை அப்புறப்படுத்திய பின் ரயிலை இயக்கினார். திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் விசாரித்தார். நேற்று காலை அப்பகுதி கிராமங்களில் போலீசார் இது குறித்து விசாரித்தனர். அருகில் உள்ள சுக்குலாபுரம், இ.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் யாரேனும் கற்களை வைத்திருக்கலாம் என, சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.