sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவர் தற்கொலை: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுங்க எஸ்.பி., யிடம் முறையிட்ட உறவினர்கள்

/

மாணவர் தற்கொலை: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுங்க எஸ்.பி., யிடம் முறையிட்ட உறவினர்கள்

மாணவர் தற்கொலை: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுங்க எஸ்.பி., யிடம் முறையிட்ட உறவினர்கள்

மாணவர் தற்கொலை: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுங்க எஸ்.பி., யிடம் முறையிட்ட உறவினர்கள்


ADDED : ஜூலை 18, 2025 05:35 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே ஆசிரியர் திட்டியதற்காக 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து மாணவரை தற்கொலைக்கு துாண்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தனர்.

திண்டுக்கல் வெள்ளோடு அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த மரியஅருள் சந்தியாகு - ஆரோக்கியமேரி 2வது மகன் சாம்ஜஸ்பர். வக்கம்பட்டி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். ஆசிரியர்கள் திட்டியதால் ஜூலை 14 மாலை தற்கொலை செய்து கொண்டார்.

அம்பாத்துரை போலீசார் விசாரித்துவந்த நிலையில், காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் 50க்கு மேற்பட்டோர் எஸ்.பி., பிரதீப்பை சந்தித்து புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது :எங்களுக்கு தாமதமாகவே உண்மை தெரியவந்தது. பள்ளிக்குள் அலைபேசி பயன்படுத்தியது தொடர்பாக நடந்த விசாரணையில் எனது மகனை ஆசிரியர்கள் அடித்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளார். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்வதாக எஸ்.பி., உறுதியளித்திருக்கிறார் என்றனர்.






      Dinamalar
      Follow us