/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓராண்டாகியும் உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள்
/
ஓராண்டாகியும் உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள்
ADDED : செப் 22, 2024 01:50 AM
ஒட்டன்சத்திரம்:தமிழக அரசால் 2023ல் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஓராண்டாகியும் கல்வி உதவித் தொகை வழங்காததால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு 2023 அக்டோரில் நடந்தது. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 673 மாணவர்கள் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியானது. ஆயிரம் பேர் தேர்வாகினர்.
இவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை உதவித் தொகை வழங்கவில்லை. இந்தாண்டிற்கான தேர்வும் முடிந்துள்ள நிலையில் 2023ல் தேர்வானவர்களுக்கு கல்வி உதவி தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.