sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் சூரசம்ஹாரம்; எங்கும் அரோகரா கோஷம்

/

பழநியில் சூரசம்ஹாரம்; எங்கும் அரோகரா கோஷம்

பழநியில் சூரசம்ஹாரம்; எங்கும் அரோகரா கோஷம்

பழநியில் சூரசம்ஹாரம்; எங்கும் அரோகரா கோஷம்


ADDED : நவ 08, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 6:00 மணிக்கு மலை அடிவாரம் கிரிவீதியில் நடந்த சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி தரிசித்தனர்.

இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நவ., 2ல் துவங்கியது. இதையடுத்து அன்று யானை படிப்பாதை வழியாக கோவில் யானை கஸ்துாரி முருகன் கோவில் சென்றது.

விழாவில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில் நேற்று (நவ., 7) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்க மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடந்தது. இதையடுத்து கோவில் திருநடை சாத்தப்பட்டது.

விரதம் இருந்த பக்தர்கள் பழநி கோவில், திருஆவினன்குடி, பிரம்ம தீர்த்தம், பெரியநாயகி அம்மன் கோவில்களில் வாழை தண்டு, பழங்கள், காய்கறிகள் கலந்த படையலை வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்டனர். பின் ஆறு நாட்கள் உபவாசம் இருந்த பக்தர்கள் முருகனுக்கு படைக்கப்பட்ட வாழை தண்டை உட்கொண்டனர்.

இதையடுத்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை உடன் முத்துக்குமார சுவாமி, சின்னகுமாரசுவாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினர். பராசக்தி வேல் திருஆவினன்குடி குழந்தைவேலாயுதசுவாமி கோவில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சின்னகுமாரசுவாமி சூரசம்ஹரத்திற்காக பாத விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டார். அங்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் நிற்க சூரசம்ஹாரம் நடந்தது.

அமைச்சர் சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். இறுதியில் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடந்தது.

சின்னகுமாரசுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின் முருகன் கோவிலில் இரவு சம்ரோட்சன பூஜை பின் அர்த்தஜாமபூஜை நடந்தது.

இன்று காலை 9:30 மணிக்கு முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானைஉடன் சண்முகருக்கும், இரவு 8:20 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தெய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us