sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்

/

பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்

பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்

பழநி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்


ADDED : நவ 06, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 06, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நாளை ( நவ., 7) மாலை நடக்கும் நிலையில் காலை 11:00 மணி முதல் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அன்றிரவு நடக்கும் தங்கரத புறப்பாடும் நடைபெறாது.

பழநி முருகன் கோயிலில் நவ., 2ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாளை சூரசம்ஹாரம் நடப்பதால் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4:30 மணிக்கு விளாபூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலபூஜை, மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, மதியம் 3:10 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிகளையடுத்து கோயில் திருநடை சாத்தப்படுகிறது. இதன் பின் சுவாமி அடிவாரம் கிரிவீதி வர மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையடுத்து சுவாமி கோயிலுக்கு திரும்ப வழக்கப்படி பூஜைகளுடன் ராக்கால பூஜையும் நடக்கிறது. இதை தொடர்ந்து படிப்பாதை, வின்ச்சில் வரும் பக்தர்கள் காலை 11:00 மணி வரை மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுபோல் அன்று இரவு நடக்கும் தங்கரத புறப்பாடும் நடக்காது.

ஏழாம் நாளான நவ.,8ல் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு, மாலையில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us