/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைரோடு அம்பாத்துறை ரயில்பாதையில் கண்காணிப்பு
/
கொடைரோடு அம்பாத்துறை ரயில்பாதையில் கண்காணிப்பு
ADDED : அக் 16, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:கனமழை காரணமாக ரயில் விபத்தை தடுக்க திண்டுக்கல் கொடைரோடு - அம்பாத்துறை இடையே ரயில் வழித்தடத்தில் உள்ள மலை பாறையை கண்காணிக்க ரயில்வே அலுவலர்கள் 5 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை - சென்னை செல்லும் ரயில்கள் கொடைரோடு வழியாக செல்கின்றன. கொடைரோட்டிற்கும் அம்பாத்துறைக்கும் இடையே பாறையை உடைத்து 50 அடி பள்ளத்தில் ரயில் பாதை செல்கிறது. மழைக்காலம் என்பதால் இவ்வழித்தடத்தில் தண்ணீர் தேங்கவும், பாறைகள் உருளவும் வாய்ப்புகள் உண்டு.
எனவே இப்பாதையை கண்காணிக்க 5 அலுவலர்களை ரயில்வே துறை நியமித்துள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.