நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கொடைக்கானல் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்தது. இந்நிலையில் கொடைக்கானல் ரோட்டில் உள்ள நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் ஆகியவை குறித்து வருவாய் துறை நெடுஞ்சாலை துறை,வனத்துறையினர் இணைந்து ஆய்வு செய்தனர்.
தாசில்தார் பிரசன்னா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அன்பையா, பழநி வனச்சரகர் கோகுல கண்ணன் பங்கேற்றனர்.