/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவிக்கு துன்புறுத்தல் ஆசிரியர் பணி நீக்கம்
/
மாணவிக்கு துன்புறுத்தல் ஆசிரியர் பணி நீக்கம்
ADDED : ஜன 22, 2025 02:08 AM
தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பன்னீர்செல்வத்தை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
ஆசிரியர் பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட மாணவிக்கு அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பேசியது குறித்து மாணவி குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மை என தெரிய வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் பன்னீர்செல்வத்தை தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தது. ஆசிரியரிடம் உரிய விளக்கம் கிடைக்கப்பெறாத நிலையில் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் ஆசிரியரை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா கூறுகையில், ''மாணவியிடம் ஆசிரியர் தவறாக நடந்தது குறித்து பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. நிர்வாகம் தனி குழு அமைத்து விசாரித்ததில் ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியர் கட்டாய பணி ஓய்வில் அனுப்பியது குறித்த அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை,'' என்றார்.
பள்ளி செயலாளர் முருகேசன் கூறுகையில்,''புகார் குறித்து விளக்கம் கோரி கடிதமும் அனுப்பப்பட்டது. விளக்கம் திருப்தியில்லாத நிலையில் ஆசிரியர் செய்தது தவறு என தெரிய வந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.