/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்
/
புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்
ADDED : செப் 06, 2025 03:55 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், இலக்கிய களம் சார்பில் 12 -வது புத்தத்திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. 9 ம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
11:30 மணிக்கு நடந்த மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையில் ஓவியப்பயிற்சி ,மதியம் சிலம்பம் விளையாட்டு நடந்தது. மாலை 5:00 மணிக்கு செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எப்.எஸ்., பதின்மப்பள்ளி, திண்டுக்கல் மாநகராட்சி நினைவு மேல்நிலைப்பள்ளி, செவாலியர் பதின்மப்பள்ளி, வர்மானியா சிலம்பம், ஆசாரி புதுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நடந்த சிந்தனையரங்க நிகழ்வில் மார்க்சிஸ்ட் மதுரை எம்.பி., வெங்கடேஷன் பேசினார்.