/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டெட், டி.ஆர்.பி., தேர்வை விரைந்து நடத்த வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
/
டெட், டி.ஆர்.பி., தேர்வை விரைந்து நடத்த வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
டெட், டி.ஆர்.பி., தேர்வை விரைந்து நடத்த வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
டெட், டி.ஆர்.பி., தேர்வை விரைந்து நடத்த வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2024 02:38 AM
திண்டுக்கல்:'காலி பணியிடங்களை நிரப்ப டெட், டி.ஆர்.பி., தேர்வை அரசு விரைந்து நடத்த வேண்டும்,' என, தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல்லில் இச்சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை, கள்ளர் சீரமைப்பு துறை, ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் என பல்வேறு பணியிடங்கள் 12,000 வரை காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப டெட் , டி.ஆர்.பி., தேர்வை அரசு விரைவாக நடத்த வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.
அரசு வழங்கக்கூடிய மாணவர்களுக்கான நலத்திட்டங்களை எமிஸ் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி அதிகம் உள்ளது. இதனால் கற்றல், கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது. அப்பணியை மேற்கொள்ள தனியாக முழு நேர ஊழியர்களை பணியமர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

