/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி ரோப்காரில் கற்களை ஏற்றி சோதனை
/
பழநி ரோப்காரில் கற்களை ஏற்றி சோதனை
ADDED : நவ 19, 2024 06:27 AM

பழநி: பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் கற்கள் வைத்து சோதனை நடைபெற்றது.
பழநி கோயில் சென்று வர ரோப் கார் மூன்று நிமிடத்தில் பயன்பட்டு வந்தது. அக். 7 முதல் பராமரிப்பு பணிக்காக சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடந்தன. இயந்திரத்தின் உறுதி தன்மைக்காவும் சோதனை செய்யப்பட்டது. நவ. 16ல் பெட்டிகள் சரி செய்யப்பட்டு பொருத்தப்பட்ட நிலையில் எடையில்லாமல் ரோப்கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. நேற்று கான்கிரீட் கற்களால் ஆன எடைகள் ஏற்றப்பட்டது.
ஒரு பெட்டிக்கு 300 கிலோ விதம் எட்டு பெட்டிகளுக்கு 2400 கிலோ எடை ஏற்றப்பட்டு ரோப் கார் சோதனை செய்யப்பட்டது. இன்று பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இவர்கள் அறிக்கை தொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரோப்கார் சேவை துவங்கப்பட உள்ளது.

