/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உழைத்த மகானுக்கு நன்றி குருபூஜை 4160 கிலோ மெகா புளியோதரை தயாரிப்பு
/
உழைத்த மகானுக்கு நன்றி குருபூஜை 4160 கிலோ மெகா புளியோதரை தயாரிப்பு
உழைத்த மகானுக்கு நன்றி குருபூஜை 4160 கிலோ மெகா புளியோதரை தயாரிப்பு
உழைத்த மகானுக்கு நன்றி குருபூஜை 4160 கிலோ மெகா புளியோதரை தயாரிப்பு
ADDED : பிப் 04, 2024 05:42 AM

வடமதுரை : வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் தங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த மதுரை மகானுக்கு நன்றி கடனாக திருவிழா போல கிராமத்தினர் 83வது குருபூஜையை நடத்தினர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லுச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரையில் சில ஆண்டுகள் தங்கினார்.
பின்னர் காணப்பாடி புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மழையின் போது மழை நீர் படாமல் இருந்தது. இதனால் அவரிடம் பக்தி கொண்ட மக்கள், அவரை 'கள்ளியடி சுவாமிகள்' என அழைத்தனர். கிராமத்தில் தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 1941 ஜனவரி 21ல் சமாதி அடைந்தார்.
அவரது நினைவாக இங்கு கோயில் கட்டிய கிராம மக்கள் ஆண்டுதோறும் இறந்த நாளின் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு குரு பூஜை நடத்துகின்றனர்.
இதற்காக மக்கள் வரி, நன்கொடை வழங்குகின்றனர். நேற்று நடந்த 83வது நடந்த குரு பூஜையில் ரமேஷ் பால் குடத்தை சுமந்தபடி மக்களுடன் கிராம வீதிகள் வழி ஊர்வலமாக வந்தார்.
விநாயகர், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த பின் கள்ளியடி குருநாதர் கோயிலில் அபிஷேகம் செய்தனர். விழாவிற்காக 4160 கிலோ அரிசி, 400 கிலோ புளி, 350 கிலோ நிலக்கடலை பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய் பயன்படுத்தி மெகா புளியோதரை பிரசாதம் தயாரித்து 4 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்களுக்கு வழங்கினர்.