sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு பஸ் அதிகாரிகள் அலட்சியத்தால் நீடிக்கும் அவதி முதல்வர் தனிப்பிரிவு மனு மீது புறம்பான பதிலால் அதிருப்தி

/

அரசு பஸ் அதிகாரிகள் அலட்சியத்தால் நீடிக்கும் அவதி முதல்வர் தனிப்பிரிவு மனு மீது புறம்பான பதிலால் அதிருப்தி

அரசு பஸ் அதிகாரிகள் அலட்சியத்தால் நீடிக்கும் அவதி முதல்வர் தனிப்பிரிவு மனு மீது புறம்பான பதிலால் அதிருப்தி

அரசு பஸ் அதிகாரிகள் அலட்சியத்தால் நீடிக்கும் அவதி முதல்வர் தனிப்பிரிவு மனு மீது புறம்பான பதிலால் அதிருப்தி


ADDED : பிப் 14, 2025 05:43 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி: திண்டுக்கல்- கன்னிவாடி இடையிலான அரசு பஸ்களின் இயக்கத்தில் குளறுபடி பிரச்னையில் முதல்வர் தனிப்பிரிவு புகார்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை அதிகாரிகள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து குட்டத்துப்பட்டி, திப்பம்பட்டி வழியே கன்னிவாடிக்கு அரசு பஸ் வசதி மட்டுமே உள்ளது. குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி, கோனுார், கசவனம்பட்டி ஆகிய இடங்களில் நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்களும், கூலி தொழிலாளர்களும் போக்குவரத்து வசதிக்காக இவற்றை நம்பி உள்ளனர். ஏற்கனவே பள்ளி நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் போதுமானதாக இல்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் அடிக்கடி ட்ரிப்-கட் செய்வது, மாற்று வழித்தட இயக்கம் என பிரச்னை அதிகரித்து வருகிறது. கூடுதல் போக்குவரத்து வசதி தேவைப்படும் சூழலில் சமீபகாலமாக அடுத்தடுத்து அரசு பஸ் சேவை குறைப்பு அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக மக்களால் கலெக்டர், முதல்வர் தனிப்பரிவுக்கு அனுப்பும் புகார்களுக்கு அதிகாரிகள் தவறான பதில் அளித்து தீர்வு காணாமல் தவிர்ப்பதாக இப்பகுதியினர் குமுறுகின்றனர். அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் குளறுபடிகளை நீக்கி கூடுதல் சேவைக்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியம்


மணிவண்ணன் ,தனியார் நிறுவன ஊழியர், வெல்லம்பட்டி : அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் இயக்கத்தில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி தடை ஏற்படுகிறது. ரோடு சேதத்தை காரணம் கூறி, கன்னிவாடியில் இருந்து மாலை 4:10 மணிக்கு கோனுார் அரசு மேல்நிலைப்பள்ளி வழியே இயங்கி வந்த அரசு பஸ் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. காலை 9:20 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் அரசு பஸ் வழித்தடத்தையும் அரசு பள்ளிகளை புறக்கணித்து நேரடியாக இயக்குகின்றனர். ரோடு பணி முடிந்து பல வாரங்களாகியும் மீண்டும் இயக்கவில்லை. முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டரிடம் கொடுத்த மனுக்களுக்கு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளவில்லை. பஸ்கள் வழக்கம் போல் இயக்குவதாக உண்மைக்கு புறம்பாக பதில் அளித்து தீர்வு காணாமல் தவிர்க்கின்றனர்.

தனியாருக்கு ஆதரவு


ரஜினி ,வியாபாரி, தருமத்துப்பட்டி : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 7, 8 வழித்தடங்களுக்கான தனியார் பஸ்கள் வழக்கம் போல் வடக்கு ரத வீதி, மேற்கு தாலுகா அலுவலகம், கோட்டை மாரியம்மன் கோயில் வழியாக இயங்குகின்றன. இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவர். தற்போது அரசு டவுன் பஸ்கள், தனியாருக்கு ஆதரவாக தொடர்பில்லாத நாகல்நகர் வழியே இயக்கப்படுகின்றன. போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல் என தவறான பதில் அளிக்கின்றனர். ஆனால் தனியார் டவுன் பஸ்கள் மட்டுமே வழக்கமான தடத்தில் இயக்கப்படுகின்றன. மகளிர், கூலித் தொழிலாளர்கள், தினமும் வேலைக்கு சென்று திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். வருவாய் பாதிப்பை தவிர்க்க வழக்கமான வழித்தடத்தில் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

தேவை கூடுதல் பஸ்


சஞ்சீவி, கூலித்தொழிலாளி, குட்டத்துப்பட்டி: மைலாப்பூர் துவங்கி ஆவரம்பட்டி, குட்டத்துப்பட்டி, குஞ்சனம்பட்டி,கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி, திப்பம்பட்டி, பாப்பன்குளம், போத்திநாயக்கன்பட்டி, கிட்டம்பட்டி, மணியகாரன்பட்டி, முத்துக்குமரன்பட்டி, நவாப்பட்டி என 20க்கு மேற்பட்ட குக்கிராமத்தினர் அரசு பஸ் வசதியை நம்பி உள்ளனர். இரவு 8:10 மணிக்கு மேல் இத்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து பஸ் வசதி இல்லை. விசேஷ நாட்களில் அரசு டவுன் பஸ்களை வேறு மாவட்ட சிறப்பு பஸ்சாக அனுப்புகின்றனர். போதிய போக்குவரத்து வசதியற்ற மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கசவனம்பட்டி வழித்தடத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏதுவாக கூடுதல் நேரங்களில் இதனை இயக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us