sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி

/

கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி

கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி

கிணற்றுக்குள் பாய்ந்த டிராக்டர் உயிர் தப்பிய விவசாயி


ADDED : நவ 11, 2024 04:44 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே வயலில் உழுதுகொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கிணற்றுக்குள் பாய்ந்ததில் விவசாயி பழனியப்பன் உயிர் தப்பினார்.

பாளையம் பேரூராட்சி சேவகவுண்டன் புத்துாரைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் 60.

இவர் தனது வயலில் நெல் நடவு செய்ய டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டார்.

கிணற்று அருகே நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது டிராக்டர் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. சுதாரித்த பழனியப்பன் டிராக்டரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

கீழே குதித்ததில் பழனியப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த டிராக்டரை கிரேன் வைத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us