ADDED : அக் 10, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே சுக்காம்பட்டி மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சலுான் கடை உரிமையாளர் இளங்கோவன். இவரது மகள் பிருந்தா 7. இங்குள்ள அரசு துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார்.
நேற்று காலை இப்பகுதியில் உள்ள செம்மடை குளம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க தனது 5 வயது தங்கை பாண்டீஸ்வரியுடன் சென்ற பிருந்தா, குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். பாண்டீஸ்வரி கரையிலேயே நின்றுவிட்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.