ADDED : செப் 28, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: -நத்தம் தொகுதி காங்கிரஸ் , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பிற்பட்டோர் பிரிவு சார்பாக ஓட்டு திருட்டுக்கு எதிராக கோபால்பட்டியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சாணார்பட்டி வட்டார தலைவர்கள் ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், பழனியப்பன் தலைமை வகித்தனர். மாவட்ட ஓ.பி.சி., தலைவர் அம்சவள்ளி, ஓ.பி.சி., தொகுதி தலைவர் ஞானகுமார், மாவட்ட செயலாளர் சின்னச்சாமி வட்டார தலைவர் பழனிச்சாமி, நகர தலைவர் அப்துல் காதர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, அருமைநாதன் ஆவியான், சின்ன கண்ணு, அய்யாவு,ஆனிமுத்து, கோபால் கலந்து கொண்டனர். ஓ.பி.சி., வட்டார தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.