ADDED : பிப் 09, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி மேற்கு கிரிவீயில் பல ஆண்டுகளாக தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த கல் மண்டபம் மீட்கப்பட்டது. இங்கு பக்தர்கள் பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் பாதுகாப்பு அறை பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், கல் மண்டபத்தில் அமைக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பு அறையை கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து திறந்து வைத்தார்.