/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
/
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
பாதாள சாக்கடையால் நித்தம் நித்தம் பிரச்னை சிரமத்தில் திண்டுக்கல் 14 வது வார்டு மக்கள்
ADDED : மார் 23, 2025 03:54 AM

திண்டுக்கல் : பாதாள சாக்கடை திட்டத்தால் நித்தம் நித்தம் பிரச்னை, நாய்கள், கொசுத்தொல்லை என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 14 வது வார்டு மக்கள்.
வ.உ.சி., நகர், விவேகானந்தா நகர், கோபால் நகர், விஸ்தரிப்பு பகுதியில் பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கின்றனர். ஆனால் முறையாக இணைப்பு கொடுக்காததால் கழிவுநீரை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. இங்கு சேகரமாகும் கழிவுநீர் பாதாள சாக்கடை கால்வாய் வழியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் குடியிருப்பு பகுதியைவிட கழிவுநீர் சேரும் இடம் உயரமாக அமைத்ததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது .வேறு வழியின்றி சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புகளை பொதுமக்களே துண்டித்து சாக்கடை வழியே செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மழைக்காலத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. டெலிபோன் காலனி பகுதியில் ரோடுகள் சேதமாக கிடக்கிறது.பள்ளி சிறுவர்கள் இவ்வழியாக காலை மாலை நேரங்களில் செல்வதால் அவர்களும் பாதிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் நாய்கள் அங்கும் இங்குமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் ஒன்றோடொன்று சண்டையிட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த முன்வரவேண்டும். பல நாட்களாக கொசு மருந்து அடிக்காமல் உள்ளனர்.இதனால் இரவில் மட்டுமின்றி பகல்நேரங்களிலும் கடிக்கிறது.
புதுப்பிக்காத ரோடு
ஜவஹர், விவேகானந்தா நகர்: பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கின்றனர். ஆனால் முறையாக இணைப்பு கொடுக்காததால் கழிவுநீரை வெளியேற்றுவதில் சிரமம் நீடிக்கிறது. மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மழைக்காலத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பகல், இரவில் கொசுக்கள் மொய்க்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக ரோட்டை தோண்டியவர்கள் மீண்டும் அதை புதுப்பித்து தரவில்லை.
நோய் தொற்றுக்கு வழி
குமரன், அண்ணா நகர் : கொசு மருந்துகள் அடிப்பதும் குறைவாக இருப்பதால் கொசுக்கள் வாயிலாக நோய் தொற்றுகள் பரவுகிறது. கால்நடைகள் தாராளமாக சுற்றுவதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சாக்கடைகள் தரமற்ற முறையில் இருப்பதால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோடுகளில் ஆறுகளாக ஓடுகிறது.
எந் த பலனு மில்லை
தனபாலன், கவுன்சிலர் ( பா.ஜ.,): ஒவ்வொரு கூட்டத்தில் வெறும் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் மெத்தனப் போக்கோடு நடந்துகொள்கிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்கு மதிப்பளித்து, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். பாதாளச்சாக்கடை இணைப்பு குறித்து பலமுறை முறையிட்டும் எந்த பலனுமில்லை என்றார்.