ADDED : அக் 23, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பாலசமுத்திரம் குரும்பபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 32. 2017 ல் அதே பகுதி பெருமாள் மனைவி பார்வதியை கத்தியால் குத்தினார்.
இது குறித்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. எட்டு ஆண்டுகள் சிறை , பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு போது மாரிமுத்து ஆஜராகததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பாலசமுத்திரம் பூங்கா பகுதியில் சுற்றி திறிந்த அவரை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.

