/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை'யில் சுட்டெரிக்கும் வெயில்
/
' கொடை'யில் சுட்டெரிக்கும் வெயில்
ADDED : மார் 15, 2026 05:55 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் பாதிக்கின்றனர்.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63வது மலர்கண்காட்சிக்காக 3 கட்ட மலர் நாற்று நடவு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மலர் படுகையில் நடவு செய்யப்பட்டுள்ள 6 லட்சம் மலர் நாற்றுகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க காலை, மாலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக மாலையில் பனியின் தாக்கம் நீடிப்பதால் இவற்றை தவிர்க்க நிழல் போர்வைகளும் போர்த்தப்படு கிறது.
வழக்கமாக கொடைக்கானலில் கோடையில் 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை முதல் 25 வரை நீடிக்கும். தற்போது 28 டிகிரி செல்சியஸ் பகல் நேர வெப்பநிலை நீடித்து வருகிறது.
இரவு நேர வெப்பநிலை 10 முதல் 14 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. தகிக்கும் கோடை வெயிலால் குளு,குளு நகரான கொடைக்கானல் புழுக்கமடைந்துள்ளது.
இங்குள்ள வீடுகளில் மின்விசிறி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

