/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : டிச 13, 2025 05:53 AM

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை, ராகு கால பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேய்பிறை அஷ்டமி ராகு கால பூஜையில் வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாக தேவதைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சங்கல்பம் செய்து தேங்காயில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தேய்பிறை அஷ்டமி பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராகி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமி நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள்மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

