sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

/

திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


ADDED : நவ 24, 2024 04:29 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது. தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.

சின்னாளபட்டி : அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது . செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

வத்தலக்குண்டு கெங்குவார்பட்டி ப்ராண ஆஞ்சநேயர் கோயிலில் சொர்ன ஆகர்ஷ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us