sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

/

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு


ADDED : மே 21, 2025 06:14 AM

Google News

ADDED : மே 21, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோவை, வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள் , பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி சுப்பிரமணியசுவாமி கோயில்,பழநி ரோடு காளியம்மன் கோயில் , கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. தேங்காய்,வெள்ளை பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.

நத்தம் : குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் , 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் காலபைரவர் சன்னதியிலும் சிறப்பு அலங்காரம் செய்ய தீபாராதனைகள் நடந்தது.

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை ,மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்ய அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் அபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us